Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM
நாகர்கோவிலை அடுத்துள்ள குருக்கள்மடத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு(65). இவரது மகன் துரை என்பவர்குடும்பத்துடன் குருந்தன்கோடு பகுதியில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட துரை சமீபத்தில் மரணமடைந்தார். மகன் இறந்ததில் இருந்து மிகவும் சோகத்துடன் காணப்பட்ட சாமிக்கண்ணு, அதுகுறித்து நெருங்கிய உறவினர் மற்றும்நண்பர்களிடம் கூறி கவலைப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 24-ம் தேதி எலி மருந்தை சாப்பிட் டுள்ளார்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சாமிக்கண்ணு நேற்று மரணமடைந்தார். சுசீந்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT