கடலில் மூழ்கி வங்கி ஊழியர் உயிரிழப்பு :

கடலில் மூழ்கி வங்கி ஊழியர் உயிரிழப்பு :
Updated on
1 min read

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி ராம் காலனிப் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்ராவ் போஸ்லே மகன் ரகுநந்தன் போஸ்லே (23). இவர் தெலங்கானாவில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

கடந்த 25-ந் தேதி ரகுநந்தன் போஸ்லே, தனது நண்பர்கள் சிலருடன் தெலங்கானாவில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் அனைவரும் அன்று மாலை புதுச்சேரி பகுதியில் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரகுநந்தன் போஸ்லே திடீரென மாயமானார். அவரை அவரது நண்பர்கள் தேடியும் கிடைக்கவில்லை. ரகுநந்தன் போஸ்லேவை கடல் அலை இழுத்துச் சென்றது தெரிய வந்தது. உடனே இதுகுறித்து புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸாரும் மற்றும் கடலோர காவல்படையினரும் மீனவர்கள் உதவியுடன் ரகுநந்தன் போஸ்லேவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கோட்டக்குப்பத்தை அடுத்த தந்திராயன்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில் ரகுநந்தன் போஸ்லேவின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸார் அங்கு சென்று, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in