Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

சிவகங்கை நகராட்சி மயானத்தில் - 2 நாட்களாக எரிந்த குப்பைகள் : மக்கள் பாதிக்கப்பட்டதால் எம்எல்ஏ ஆய்வு

சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகே நகராட்சி மயான வளாகத்தில் நகரில் சேகரமாகும் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். அவற்றை முறையாக அகற்றாமல் அடிக்கடி தீ வைக்கின்றனர். இதனால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால், அந்த குப்பைக் கிடங்கை மாற்ற பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களாக எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் உருவானது. இதனால் வாகன ஓட்டிகள், அரசு மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், உறவினர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு செந்தில்நாதன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். இப்பகுதியில் குப்பைகளை கொட்டி எரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தினார். தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x