Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM
சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (44). முன்னாள் ராணுவ வீரர். இவர், ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். பலரிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால், பணத்தைத் திருப்பித் தரவில்லை. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருத்தங்கல் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ரமேஷ் தலைமறைவானார். இந்நிலையில் ரமேஷ் நேற்று வீட்டுக்கு வந்துள்ளார். பணத்தை திருப்பிக்கேட்டு அவரின் வீட்டை பலர் முற்றுகையிட்டனர்.திருத்தங்கல் போலீஸார் விசாரித்தனர்.அப்போது, ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி லிங்கம்மாள் என்பவர், தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அருகிலிருந்த வர்கள் லிங்கம்மாளை தடுத்து காப்பாற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT