காவலர்களுக்கு வீடுகள் :  சிவகங்கையில் கூடுதல் டிஜிபி ஆய்வு

காவலர்களுக்கு வீடுகள் : சிவகங்கையில் கூடுதல் டிஜிபி ஆய்வு

Published on

சிவகங்கையில் கட்டப்பட்டு வரும் காவலர் குடியிருப்பு கட்டிடப் பணிகளை கூடுதல் டிஜிபி விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

சிவகங்கை ஆயுதப் படை குடியிருப்பு அருகே உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் காவலர்களுக்கு 161 வீடுகள், இன்ஸ்பெக் டர்கள், எஸ்ஐக்களுக்கு 40 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் போலீஸார் வீட்டின் அளவுக்கு ஏற்ப ரூ.19 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலுத்தி சொந்தமாக்கி கொள்ளலாம். கட்டிடப் பணிகளை காவலர் வீட்டுவசதி வாரிய கூடுதல் டிஜிபி விஸ்வநாதன் ஆய்வு செய்தார். மேலும் பொறியாளர்களிடம் விவ ரங்களை கேட்டறிந்ததோடு, ஆலோசனைகளையும் வழங்கினார். மாவட்ட எஸ்பி செந்தில்குமார் உடன் இருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in