Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

சிவகங்கை மாவட்டத்தில் மணல் கடத்தல் :

திருப்பத்தூர்

திருப்பத்தூர் சந்தை பேட்டையில் காரைக்குடி சாலையில் நேற்று அதிகாலை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீஸார் மறித்தனர்.

வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உட்பட 2 பேர் தப்பி ஓடி விட்டனர். வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் 60-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் மணல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மணல் மூட்டைகள், வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரித்து வருகிறார். ஏற்கெனவே கடந்த 2 வாரங்களில் மணல் கடத்தியது தொடர்பாக 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x