Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமை வகித்தார்.
அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் அப்துல்வகாப், ரூபிமனோகரன், ஊர்வசி அமிர்தராஜ், நயினார் நாகேந்திரன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், மாவட்ட ஆட்சியர்கள் வே.விஷ்ணு (திருநெல்வேலி), கோபால சுந்தர்ராஜ் (தென்காசி), செந்தில்ராஜ் (தூத்துக்குடி), மேகநாதரெட்டி (விருதுநகர்), அரவிந்த் (கன்னியா குமரி) மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT