பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம் :

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து தியாகதுருகம் அம்பேத்கர் சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் பெரியசாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ரூ.100-ஐ கடந்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரியும், காஸ் சிலிண்டர், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், ஏழை எளிய நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக மாதம் ரூ.7,500 வீதம் ஆறு மாதங்களுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் ஒன்றிய அரசு நேரடியாக வழங்கக் கோரியும், செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் ஆலையை மாநில அரசிடம் ஒப்படைக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்மணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலிய பெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் மாநில தொண்டரணி துணை செயலாளர் கூத்தங்குடி பாலு ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலாளர் கனகசபை நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in