Published : 01 Jul 2021 03:18 AM
Last Updated : 01 Jul 2021 03:18 AM

தூத்துக்குடியில் 10 நாட்களில் - 273 மின் பாதைகளில் பராமரிப்பு :

தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜெ.அ.ஞானேஸ்வரன் கூறியதாவது:

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தில் கடந்த 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 39 துணை மின் நிலையங்கள், 273 மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 39 துணை மின் நிலையங்களில் உள்ளஆற்றல் மின்மாற்றிகள், மின்னூட்டிகள், ரிலேகள், காற்றுதிறப்பான்கள் மற்றும் அலுமினிய பார்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுபோல, 273 மின் தொடர்களில் உள்ள மின்கம்பங்களில் சூழ்ந்திருந்த செடி கொடிகள் களையப்பட்டு மின்பாதையின் வழித்தடங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

இந்த மின் பாதைகளில் சேதமடைந்திருந்த 87 மின் கம்பங்கள், பழுதடைந்த 840 இன்சுலேட்டர்கள், சாய்ந்த நிலையில் இருந்த 355 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும்,தொய்வாக இருந்த மின் பாதைகளில் 143 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளன. மின் பாதைகளில் இருந்த 950 இழுவை கம்பிகள் சீர் செய்யப்பட்டுள்ளன். மின் பாதைகளுக்கு அடியில் உராயும் நிலையில் இருந்த மரக்கிளைகள் 3,176 இடங்களில் அகற்றப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்வழங்கும் வகையில் இந்த பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x