Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் : கரோனாவால் 8 பேர் உயிரிழப்பு :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 167 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 25,503 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 224 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து இதுவரை 56,130 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் நேற்று மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 707 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 155 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 41,355 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று 394 பேர் உட்பட இதுவரை 38,759 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,275 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 321பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x