Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM

புதிதாக 345 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

வேலூர்/திருப்பத்தூர்/தி.மலை

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக 345 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு நேற்று உறுதியானது. மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறு வோரின் எண்ணிக்கை 1,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 108 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 228 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 177 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண் ணிக்கை 47,131-ஆக உயர்ந்துள்ளது. 45,052 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். 1,534 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 545-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x