தேனியில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு :

தேனியில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு :
Updated on
1 min read

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராமராஜன் (35). இவர், தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே தேனி - கம்பம் சாலையில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து கடையை மூடி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ராமராஜன் உள்ளே சென்று பார்த்தபோது, கணினி, ஸ்கேனர் கருவி திருடுபோனது தெரிய வந்தது.

அதேபோல், இவரது கடைக்கு அருகில் உள்ள டயர் கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு அங்கிருந்த 2 கணினிகளும் திருடுபோயுள்ளன. பழனிசெட்டிபட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in