பெரம்பலூர் எஸ்.பி நிவாரண உதவி :

பெரம்பலூர் எஸ்.பி நிவாரண உதவி :
Updated on
1 min read

கரோனா 2-ம் அலை பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வார காலத்துக்கு தளர்வில்லாத ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேலா கருணை இல்லத்தில் வசித்து வரும் ஆதரவற்ற 85 பேருக்கு உதவும் வகையில், அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களை பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் நேற்று வழங்கினார்.

அப்போது, மருத்துவர் புவனேஸ்வரி, டிஎஸ்பி சரவணன், கரோனா கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ரஞ்சனா ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in