சேவாபாரதி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல் :

சேவாபாரதி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல் :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில், ஆர்எஸ்எஸ் சேவா பாரதி சார்பில், கபசுர குடிநீர் மற்றும் ஆர்சனிக் ஆல்பம் மருந்து நேற்று வழங்கப்பட்டது.

இதேபோல, ஊரடங்கு முடியும் வரை தினமும் சுமார் 500 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சேவாபாரதி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கு உடையார்பாளையம் ஜமீன்தார் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் சுமங்கலிகுமார், ராமபாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in