Published : 09 May 2021 03:16 AM
Last Updated : 09 May 2021 03:16 AM
“ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள தால் கரோனா கட்டுக்குள் வரும்”என, தூத்துக்குடி மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆகியோர் கோவில்பட்டியில் தனியார் கல்லூரிகளில் செயல்படும் கரோனா பரிசோதனை மையங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
கரோனா கட்டுக்குள் வரும்
பின்னர் கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி மருந்து போதிய அளவு இருப்பு உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட முன்வர வேண்டும். கோவில்பட்டியில் நகராட்சி மூலம் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் கரோனா பரவல் கட்டுக்குள் வரும்.கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தனி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்றார் அவர்.
எதிர்ப்பு சக்தி
மாவட்ட ஆட்சியர் கூறும்போது, “கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள நகராட்சிபள்ளியில் கரோனா வகைப்படுத்தும் மையம் அமைக்கப்பட உள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டவர்களை இங்கு அழைத்து வந்து,சர்க்கரை, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். அதன் பின்னர்அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதா அல்லதுதனிமை முகாமுக்கு அனுப்புவதா என முடிவு செய்யப்படும். விளாத்திகுளம் அரசு மருத்துவமனையிலும் வகைப்படுத்தும் மையம் தொடங்கப்பட உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் யாரும் இறப்பது கிடையாது. தடுப்பூசி இரண்டு முறை சரியான காலஅளவில் போட்டுக்கொள்ள வேண்டும். 2-வது தடுப்பூசி எடுத்துக்கொண்ட 14 நாட்களுக்கு பின்னர் தான் உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும். ஆனால், அதன் பின்னரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்” என்றார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT