Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
காவல் நிலையங்களில் உள்ள உளவுக்காவலர் (ஸ்டேஷன் ஐஎஸ்)பணியிடத்தை நீக்க, மாநகர காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல்துறை நிர்வாகத்தில், 15 சட்டம் ஒழுங்கு, 15 குற்றப்பிரிவு, 8 போக்கு வரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அது தவிர, மாநகர குற்றப்பிரிவு, சைபர் கிரைம், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 10-க்கும்மேற்பட்ட சிறப்புப் பிரிவுகள் உள்ளன.
காவல் நிலையங்கள் வாரியாக நடக்கும் விவரங்களைச் சேகரிக்க, 15 உளவுக் காவலர்கள் (ரெகுலர்ஐஎஸ்) உள்ளனர். இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களின் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் நடக்கும் சட்டம் ஒழுங்குதொடர்பான தகவல்களை சேகரித்து, நுண்ணறிவுப் பிரிவுகூடுதல் துணை ஆணையர் மூலம் மாநகர காவல் ஆணையருக்கு தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல, மாநகரில் உள்ள15 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர்களுக்கு உதவியாக 15 உளவுக் காவலர்கள் (ஸ்டேஷன் ஐஎஸ்) உள்ளனர். இவர்கள் பெரும்பாலும், இன்ஸ்பெக்டர்களுடன் வலம் வருவர்.இவர்கள் ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக இருந்து கொண்டு ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும், வசூல் வேட்டை நடத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, சமீபத்தில்7 காவல் நிலைய உளவுக்காவலர் களை, காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். அது மட்டுமின்றி, ஒரு காவல் நிலையத்துக்கு இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த உளவுக் காவலர்கள் இருப்பதால், பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படுவதோடு, தகவல்கள் சேகரிப்பதில் இடையூறுஏற்பட்டு, தேவையற்ற சர்ச்சைக ளும் ஏற்படுகின்றன. இது போன்ற சர்ச்சைகள், இடர்பாடுகளை தவிர்க்க காவல் நிலைய உளவுக்காவலர் பணியிடத்தை நீக்க மாநகரகாவல்துறையினர் திட்டமிட்டுள்ள னர்.
இதுதொடர்பாக மாநகர காவல்ஆணையர், சட்டம் ஒழுங்கு துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதையடுத்து ஒரு சில வாரங்களில், காவல் நிலையங்களில் உள்ள உளவுக்காவலர் பணியிடம் நீக்கப்பட்டு, ரெகுலர் ஐஎஸ் உளவுக்காவலர்கள் மட்டும் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப் படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT