Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

ராஜபாளையம் பகுதியில் கனமழை - காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு :

விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ராஜபாளையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமைந்துள்ளது அய்யனார் கோயில்.

அதை ஒட்டியுள்ள அய்யனார் கோயில் காட்டாற்றில் வரும் தண்ணீர் ராஜபாளையம் நகராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. கனமழை பெய்யும்போது காட்டாற்றில் வரும் நீர் குறுக்கே உள்ள தடுப்பணைகள் மூலம் ஆறாவது மைல் நீர்தேக்கத்துக்கு திருப்பி விட்டு நீரை நிரப்பி குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

எஞ்சிய காட்டாற்று நீர் ஓடைகள் வழியாகச் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ராஜபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் காட்டாறுகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான அய்யனார் கோயில் ஆற்றுப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x