Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

தமிழக எல்லையில் - கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வலியுறுத்தல் :

கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கரோனா வேகமாக பரவி வருவதால் அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகளால் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக ஓசூர் எல்லைப்பகுதியில் கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அம்மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் மே மாதம் 10-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து பெங்களூரு அத்திப்பள்ளி வழியாக தமிழக எல்லை ஜுஜுவாடிக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் நடந்து வருகின்றனர். இவர்கள் ஜுஜுவாடியில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக அரசு நகரப் பேருந்துகளில் ஓசூர் வரை பயணித்து பின்பு ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்துதமிழக அரசு விரைவு பேருந்துகளில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணிக்கின்றனர்.

ஆகவே தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக ஓசூர் எல்லை வழியாக நடந்து வருபவர்களுக்கு எல்லை யிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது ஓசூர் பகுதிமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x