Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

காரைக்காலில் புதிதாக 142 பேருக்கு கரோனா தொற்று :

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட பரிசோதனை முடிவுகளில் புதிதாக 142 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 7,186 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,079 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 73 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 930 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

மாவட்டத்தில் இதுவரை வெளி மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட கரோனா தொற்று காரணமாக 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x