Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
திருவாரூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, தனிப்ெபரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து, திருவாரூர் நகராட்சி 20-வது வார்டில், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா தலைமையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் படத்துக்கு, திருவாரூர் நகரச் செயலாளர் பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர்.
இதில், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் சங்கர், நகர தொண்டரணி அமைப்பாளர் மாதவன், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் மணிமாறன், மாணவரணி துணை அமைப்பாளர் ரஞ்சித், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ரோலி, வார்டு பொறுப்பாளர்கள் சுரேஷ், மூர்த்தி, வார்டு இளைஞரணி அமைப்பாளர் ரமணா உட்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT