Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

கோவில்பட்டியில் தொழிலாளி கொலை :

கோவில்பட்டி

கோவில்பட்டி வள்ளுவர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுடலைபாண்டியன்(51). கட்டிடத் தொழிலாளியான இவர், நேற்று மதியம் 2 மணியளவில் ரயில் நிலையம் நுழைவாயில் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவரை கம்பியால் தாக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே சுடலைபாண்டியன் உயிரிழந்தார்.

டிஎஸ்பி கலைக்கதிரவன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரயில் நிலைய பகுதியில் போளி வியாபாரம் செய்து வந்த சுடலைபாண்டியனுக்கும், ரயில்வே போர்ட்டராக இருந்த கோவில்பட்டி புதுக்கிராமம் வசந்த நகரைச் சேர்ந்த முத்துபாண்டி(49) என்பவருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.

இதில், சுடலைபாண்டியன் தாக்கப்பட்டது தெரியவந்தது. முத்துபாண்டி கைது செய்யப் பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x