Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
கோவைகேர் நிறுவனம் தென்னிந்தியாவில் பல்வேறு நகரங்களில் மூத்த குடிமக்களுக்கான வாழ்விடங்களை அமைத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துவரு
கிறது. கோவையில் மூன்று பகுதிகளில் சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. அங்கு வசித்துவரும் பல முதியோர் ஒன்றிணைந்து, சிங்காநல்லூரில் கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டுவரும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தேவையான ரூ.4.25 லட்சம் மதிப்பிலான 160 மின்விசிறிகள், ஒரு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நேற்று தானமாக வழங்கினர். நிகழ்ச்சியில் கோவை கேர் நிறுவனர் கர்னல் அச்சல் தரன், இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் ரவீந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT