Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

தோல்வியை பார்க்காமலேயே மறைந்த காங். வேட்பாளர் - மீண்டும் வில்லிபுத்தூரை தக்க வைத்த அதிமுக :

விருதுநகர் மாவட்டம், வில் லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது மகள் தீவிரமாக வாக்குச் சேகரித்தார். ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே அவர் உயிரிழந்த நிலையில் அதிமுக வெற்றிபெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டது.

வில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வில்லிபுத்தூர் காதிபோர்டு காலனியைச் சேர்ந்த மாதவராவ் (63) போட்டியிட்டார். சட்டம் படித்த இவர், காங்கிரஸில் மாநிலப் பொதுக்குழு உறுப் பினராகவும் இருந்தார். 1986 முதல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் செய் துவிட்டு இரு நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பின்னர் கரோனா அறிகுறியால் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனால், தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் மகள் திவ்யா தனது 9 மாதக் குழந்தையுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 11-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஆனால், கைக்குழந்தையுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மாதவராவ் மகள் திவ்யாவுக்கு வரவேற்பு இருந்தது. இந்த அனுதாப அலை காங்கிரஸுக்கு ஆதரவான வாக்குகளாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், மீண்டும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால் மாதவராவ் மகள் திவ்யாவுக்கே வாய்ப்பு அளிக்கப்படும் என காங்கிரஸ் தலைமையும் அறிவித்தது.

இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த வாக்கு எண் ணிக்கையில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் 70,475 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மாதவராவ் 57,737 வாக்குகள் பெற்றார். இதனால் ஒருவேளை காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றால், தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்படும் சூழல் தவிர்க்கப்பட்டு விட்டதாக அக் கட்சியினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x