Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM
பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் கும்பக்கரையில் அரு வியாகக் கொட்டுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகு தியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது.
இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.
எனவே சுற்றுலாப் பயணிக ளுக்கான தடை நீட்டிக்கப்பட் டுள்ளது. கும்பக்கரை அருவியில் வரும் நீர், அப்பகுதிகளில் உள்ள குளங்களுக்குச் செல்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT