Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

ஓட்டப்பிடாரம் தொகுதியை - 2-வது முறையாக தக்க வைத்த திமுக :

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியை தொடர்ந்து 2-வது முறையாக திமுக தக்கவைத்தது.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ், அதிமுக தலா 3 முறையும், திமுக, புதிய தமிழகம் கட்சி தலா 2 முறையும், சுதந்திரா கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இத் தொகுதியில் கடந்த 1989-ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட எம்.முத்தையா வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2019-ல் நடத்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சி.சண்முகையா 73,241 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 53,584 வாக்குகளுடன் 2-வது இடத்தை அதிமுக வேட்பாளர் மோகன் பிடித்தார்.

தற்போது நடந்த பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் திமுக சார்பில் சி.சண்முகையா, அதிமுக சார்பில் பி.மோகன், தேமுதிக சார்பில் எஸ்.ஆறுமுகநயினார், புதிய தமிழகம் சார்பில் கே.கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.வைகுண்டமாரி உள்ளிட்ட 17 பேர் போட்டியிட்டனர்.

இதில், திமுக வேட்பாளர் சி.சண்முகையா, 73,110 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வநாயகம் சான்றிதழ் வழங்கினார். அதிமுக வேட்பாளர் பி.மோகன் 64,600 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார்.

இந்த தேர்தல் மூலம் ஓட்டப்பிடாரம் தொகுதியை தொடர்ந்து 2-வது முறையாக திமுக தக்க வைத்துக்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x