Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM
தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் வேகமெடுத்துள்ளன.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு காவல் உதவி ஆணையர்கள் தலைமையில், சுமார் 100 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வழியாக தேவையின்றிச் செல்வோரை எச்சரித்து அனுப்புவ துடன், சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித் திரிபவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, ரோந்து போலீஸாரும் மு.க.ஸ்டாலின் வீட்டை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சுற்றி வருகின்றனர். உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT