Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

வேளாண் செயலியை பயன்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி :

உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவியர் போடி அருகே உள்ள சில மலையில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் களப்பணி ஆற்றினர்.

அப்போது உர நிர்வாகம், அசோலா தயாரிப்பு முறை, மண்வள மேம்பாடு உட்பட பல்வேறு தொழில்நுட்பம், உழவன், விவசாயம் ஆகிய செயலிகள் குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் பயிற்சி அளித்தனர்.

செயலியில் பருவ நிலை, மழை பெய்ய வாய்ப்பு, மண்வளம், விளைபொருட்களின் விலை, ஏற்றுமதிக்கான வழிமுறைகள், மானியத்திட்டங்கள் உட்பட பல்வேறு விவரங்கள் இருக்கும். விவசாயிகள் தங்கள் சந்தேகங்களையும் இதில் கேட்டுப் பயன்பெறலாம் என்று மாணவிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x