Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

நாகூர் இளைஞரிடம் ரூ.1.80 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீஸ் விசாரணை :

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது(36). இவர் காரைக்காலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு துணிக் கடைக்கு வந்த சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சங்கர சீனிவாசனுடன், சாகுல் ஹமீதுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் செல்போனில் பேசி நட்பை வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், சாகுல் ஹமீதுவிடம் ஆன்லைன் வர்த்தகம் செய்யலாம் என சங்கர சீனிவாசன் கூறியதையடுத்து, அவரது வங்கிக் கணக்குக்கு கடந்த 2020, டிச.16-ம் தேதி ரூ.1.80 லட்சத்தை சாகுல் ஹமீது அனுப்பியதாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்குப் பிறகு சங்கர சீனிவாசனை சாகுல் ஹமீது தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் எண் துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர் அளித்திருந்த சென்னை முகவரியும் போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, சாகுல் ஹமீது கடந்த ஏப்.28-ம் தேதி அளித்த புகாரின்பேரில், நாகை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மகேஷ் நேற்று வழக்கு பதிவு செய்து, சங்கர சீனிவாசனை தேடி வருகிறார்.:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x