கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை :

கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை :
Updated on
1 min read

உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் காவடிபிறை தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை(49). இவர் கடந்த 21.02.2017 அன்று முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பட்டுராஜா(55), அவரது மகன் சிவகுமார் (33), சிவக்குமாரின் உறவினரான ஜெயராமன் மனைவி மகேஸ்வரி (35) ஆகியோரை அரிவாளால் தாக்கியுள்ளார்.

குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சின்னத்துரையை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம்சாட்டப்பட்ட சின்னத்துரைக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பரமேஸ்வரி, தீர்ப்பு வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in