Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

வீடு புகுந்து பொருட்களை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்கு :

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 4-வது தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி முத்துலட்சுமி(40). இவரது வீட்டருகே வசித்து வருபவர் சின்னராஜ்(30). சில வழக்குகள் தொடர்பாக இவரை போலீஸார் தேடி வந்துள்ளனர். முத்துலட்சுமி தான் தன்னைப் பற்றி போலீஸாருக்கு தகவல் சொன்னதாக கருதிய சின்னராஜ், கடந்த 13-ம் தேதி முத்துலட்சுமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் அளித்தார்.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதி முத்துலட்சுமி மற்றும் அவரது மகள் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த சின்னராஜ் மற்றும் சிலர் ஜன்னல் கண்ணாடி, குத்துவிளக்கு, பீரோ, போன் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளனர். முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், 5 பேர் மீது மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x