Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM
கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாவட்ட அளவிலான செவன்ஸ் கால்பந்து போட்டி கோவில்பட்டி காமராஜர் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் 8 அணிகள் கலந்துகொண்டன.
இறுதிப் போட்டியில் கோவில்பட்டி கால்பந்து கழக அணியும், விளாத்திகுளம் கால்பந்து கழக அணியும் மோதி யதில் 3 - 2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. பரிசளிப்பு விழாவுக்கு கோவில்பட்டி கால்பந்து கழகச் செயலாளர் தேன்ராஜா தலைமை வகித்தார். பயிற்சியாளர் முருகேசன், கால்பந்து கழக உறுப்பினர் சந்தோஷ் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் முதலிடம் பிடித்த கோவில்பட்டி கால்பந்து கழக அணிக்கு மதுதேவி நினைவு கேடயத்தை எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன், 2-ம் இடம் பிடித்த விளாத்திகுளம் கால்பந்து கழக அணிக்கு எஸ்.எஸ்.பாலகிருஷ்ணன் நினைவு கேடயத்தை தேசிய கால்பந்து வீராங்கனை சரண்யாதேவி மற்றும் கால்பந்து கழக துணைத் தலைவர் ரம்யாதேவி, 3-ம் இடம் பிடித்த கோவில்பட்டி வ.உ.சி., அணிக்கு தங்கம் - ராஜவேல் நினைவு கேடயத்தை உடற்கல்வி ஆசிரியர் விக்னேஷ்குமார் வழங்கினர். கால்பந்து கழக உறுப்பினர் அக்சரன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT