Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM
கிருஷ்ணகிரி அருகே மணலுடன் லாரியை கனி மவளத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி மேம்பாலம் பகுதியில் கனிமவளத் துறை உதவி இயக்குநர் முத்து மற்றும் அலுவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தினர்.
அலுவலர்களைக் கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடினார். இதையடுத்து லாரியில் சோதனை செய்த போது, அதில் மார்க்கண்டேயன் நதியில் இருந்து 4 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
மணலுடன் லாரியை கைப்பற்றிய அலுவலர்கள், குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த குருபரப்பள்ளி போலீஸார், லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT