Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

வேப்பனப்பள்ளி அருகே - மனைவியை கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரண் :

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி அருகே மனை வியை கொலை செய்த கணவர், ஓசூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் சந்தைவீதி பகுதியைச் சேர்ந்தவர் சென்னபசப்பா (44). கோயில் பூசாரி. இவரது மனைவி கவுரம்மாவுக்கு (40), கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சாகர் கிராமத்தைச் சேர்ந்த மிருத்தியன் ஜெயா (23) என்பவருடன் கூடா நட்பு ஏற்பட்டது. இதனையறிந்த சென்னபசப்பா, மனைவியை கண்டித்தார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற் பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கவுரம்மாவை, வேப்பனப்பள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கே.என்.போடூர் காட்டில் உள்ள பசவேஸ்வர கோயிலுக்கு சென்னபசப்பா அழைத்துச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், துப்பட்டாவால் கவுரம்மா கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் சென்னபசப்பா கொலை செய்தார்.

இதனை தொடர்ந்து, மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி ஓசூர் காவல் நிலையத்தில் சென்னபசப்பா சரண் அடைந்தார்.

தகவலறிந்த வேப்பனப்பள்ளி போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி விசாரணை நடத்தி வருகிறார். மேலும், சென்னபசப்பாவை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x