Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

கிருஷ்ணகிரியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு இன்று கரோனா தடுப்பூசி இல்லை :

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படு வதில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மே 1-ம் தேதி 18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதற்கான மருந்துகள் இதுவரை வராததால், 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்காது எனவும், ஆனால் 45 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் கூறும்போது, 45 வயதுக்கு மேற்பட்டோர் 5 லட்சம் பேர் இருப்பதாகவும், இதில் நேற்று வரை, சுமார் ஒரு லட்சத்து, 45 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 1,500 முதல் 2,000 பேர் தடுப்பூசி போட்டு வருவதாகவும், மத்திய, மாநில அரசுகளின் அடுத்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 18 வயது வந்தோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும். இன்று வரை அதற்கான தடுப்பூசி மருந்துகள் வரவில்லை. வந்தவுடன் பதிவு செய்துள்ளவர்கள் வரிசையில், தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x