Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

தஞ்சாவூர் மாவட்டத்தில் - தொகுதி வாரியாக எத்தனை சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை? : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்தெந்த தொகுதியில் எத்தனை சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ம.கோவிந்தராவ் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திரு விடைமருதூர், கும்பகோணம், பாப நாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. இவற்றில் திருவிடைமரு தூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு ஆகிய தொகுதி களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி யிலும், பட்டுக்கோட்டை, பேராவூ ரணி தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள் ளன. இந்த 3 மையங்களிலும் நாளை(மே 2) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வாக்கு எண் ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ம.கோவிந்தராவ் கூறியது: தஞ் சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ் வொரு தொகுதிக்கும் 14 மேசைகள் போடப்படுகின்றன. இதில், திருவிடைமருதூர் தொகுதியில் 355 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 26 சுற்றுகளாகவும், கும்பகோணம் தொகுதியில் 378 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 27 சுற்றுகளாகவும், பாபநாசம் தொகுதியில் 362 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 26 சுற்றுகளாகவும், திருவையாறு தொகுதியில் 385 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 28 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன.

இதேபோல, தஞ்சாவூர் தொகுதியில் 406 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 29 சுற்றுகளாகவும், ஒரத்தநாடு தொகுதியில் 340 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 25 சுற்றுக ளாகவும், பட்டுக்கோட்டை தொகுதியில் 345 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 25 சுற்றுகளாகவும், பேராவூரணி தொகுதியில் 315 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன என்றார்.

இதற்கிடையே, வாக்கு எண் ணும் மையத்துக்குச் செல்லும் வேட் பாளர்களின் முகவர்களுக்கான கரோனா பரிசோதனை அந்தந்த தொகுதியிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில், அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x