Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
காரைக்கால் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் இணைய வழியில் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.துரைசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தமீம், மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலியபெரு மாள், ராமர், ராமகிருஷ்ணன், திவ்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். காரைக்காலில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தை கரோனா வார்டாக மாற்ற வேண்டும். மாவட்டத்தில் போதுமான அளவு துப்புரவுத் தொழிலாளர்களை நியமிக்க துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது முடக்கம் குறித்து வியாபாரிகளையும், பொதுமக்களையும் குழப்பாமல் தெளிவான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT