Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
நாகப்பட்டினம்: ரசாயன உரங்களின் விலை உயர்வைக் கண்டித்து, நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த கொளப்பாடு கடைத் தெருவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் தனபால் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அம்பிகாபதி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் செல்லையன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT