Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது :

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகேயுள்ள தெற்கு பொம்மையாபுரத்தைச் சேர்ந்தவர் காளிச்சாமி (39). இவரை கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் கடந்த 3.3.2021 அன்று கைது செய்தனர். ஏரல் புதுமனை பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (45) என்பவரை கொலை மிரட்டல் வழக்கில் கடந்த 4.4.2021 அன்று ஏரல் போலீஸார் கைது செய்தனர். குரும்பூர் அருகேயுள்ள சேதுக்குவாய்த்தான் கிழக்கு தெருவைச் சேர்ந்த சத்தியமுகேஷ் (எ) சதீஷ் (21) என்பவரை ஆற்று மணல் திருட்டு வழக்கில் குரும்பூர் போலீஸார் கடந்த 11.2.2021 அன்று கைது செய்தனர்.

இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவின்பேரில் காளிச்சாமி, இசக்கிமுத்து, சத்தியமுகேஷ் (எ) சதீஷ் ஆகிய 3 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x