Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

குமரியில் இடி, மின்னலுடன் மழை: பேச்சிப்பாறையில் 63 மிமீ., பதிவு :

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. பேச்சிப்பாறையில் 63 மிமீ., மழை பதிவானது.

கோடை காலத்துக்கு மத்தியில் குமரி மாவட்டத்தில் விட்டு விட்டு சாரல் பொழிந்து வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் மாவட்டம் முழுவதும் திடீரென கனமழை கொட்டியது. ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையின் போது பலத்த இடி, மின்னல் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். வாகனங்களில் செல்வோர் மழை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்த்து ஓரமாக நிறுத்தியிருந்தனர்.

நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், திங்கள்நகர், தக்கலை, குலசேகரம், ஆரல்வாய்மொழி, குளச்சல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை கொட்டியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நேற்று மாவட்டத்தில் குளிர்ச்சி நிலவியது. அணைப் பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் அதிக மழை பெய்தது.

அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 63 மிமீ., மழை பதிவானது.சிற்றாறு ஒன்றில் 43, பெருஞ்சாணியில் 35, புத்தன்அணையில் 34, சிவலோகத்தில் 37, சுருளகோட்டில் 10, பாலமோரில் 13 மிமீ., மழை பெய்திருந்தது.

மழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 265 கனஅடி தண்ணீர் வந்ததால் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 114 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது. பொய்கை அணையில் 17.30 அடி, மாம்பழத்துறையாறில் 14.60 அடி தண்ணீர் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x