Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
கன்னியாகுமரி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் 5 விநாடிகள் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மீனவ கிராமத்தினரிடையே சுனாமி அச்சம் ஏற்பட்டது. கடலுக்குள் சுனாமி ஏற்பட்டு கடல் சீற்றம் நிகழுமோ என்ற பீதி நிலவியது. இதனால் கன்னியாகுமரி, கோவளம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு செல்லாமல் கரை திரும்பினர். நேற்று அமைதியான சூழல் நிலவியது. எப்போதும்போல் கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தமான போதும், வழக்கத்தை விட குறைந்த அளவு மீனவர்களே கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT