கே.வி.குப்பம் தொகுதிக்கு புதிய தேர்தல் அலுவலர் காமராஜ் பொறுப்பேற்பு :

கே.வி.குப்பம் தொகுதிக்கு புதிய  தேர்தல் அலுவலர் காமராஜ் பொறுப்பேற்பு :
Updated on
1 min read

கே.வி.குப்பம் தொகுதியின் புதிய தேர்தல் அலுவலராக காமராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டு வந்த மாவட்ட வழங்கல் அலுவலர் பானுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மே 2-ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளதால் அதில் தேர்தல் நடத்தும் அலுவலர் பானு கலந்து கொள்ள முடியாததால், அவருக்கு பதிலாக மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் காமராஜை கே.வி.குப்பம் (தனி) தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து, ஆதி திராவிடர் நல அலுவலர் காமராஜ் கே.வி.குப்பம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். அதன்படி, அவர் நேற்று முன்தினம் பொற்றுப் பேற்றுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in