திருப்பத்தூரில் விதிமீறி அதிக ஆட்களை ஏற்றிச்சென்ற - ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு :

திருப்பத்தூரில் விதிமீறி அதிக ஆட்களை ஏற்றிச்சென்ற -  ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு :
Updated on
1 min read

திருப்பத்தூரில் கரோனா விதிகளை மீறி அதிக ஆட்களை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலை தடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பொது போக்குவரத்தான ஆட்டோ, பேருந்துகள், டாக்ஸிக்களில் அதிக அளவிலான ஆட்களை ஏற்றக்கூடாது, அந்தந்த வாகனங்களுக்காக அரசு நிர்ணயித்த பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பத்தூர் நகரில் கரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கிறது என புகார் எழுந்துள்ளது. விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருப்பத்தார் நகர் பகுதியில் காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது. அதிக பயணிகளை ஏற்றி வந்த 10 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இனிவரும் நாட்களில் இதுபோன்ற சோதனை கடுமையாக்கப்படும், எனவே, கரோனா பரவல் தடுப்பு விதிகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் வழக்குப்பதிவு, அபராதம், பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என காவல் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in