Published : 29 Apr 2021 03:14 AM
Last Updated : 29 Apr 2021 03:14 AM

கரோனா விழிப்புணர்வில் தேனி சட்டக்கல்லூரி மாணவர்கள் :

தேனி பேருந்து நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் கரோனா துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தேனி

தேனி சட்டக்கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் சார்பில் பேருந்துநிலையத்தில் கரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் அருண் தொடங்கி வைத்தார். கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்

டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும், பயணிகளுக்கு இலவச முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.

திட்ட அலுவலர் பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x