தேனி மாவட்டத்தில் விதிகளை பின்பற்றி - வாரச்சந்தை நடத்த அனுமதிக்க : ஆட்சியரிடம் சிறு வியாபாரிகள் மனு :

தேனி மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்தக்கோரி சிறு வியாபாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர்.
தேனி மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்தக்கோரி சிறு வியாபாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர்.
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக அனைத்து வாரச்சந்தைகளுக் கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறு வியாபாரி கள் நேற்று ஆட்சியர் அலு வலகத்தில் மனு கொடுத்தனர். தமிழக அமைப்பு சாரா தெருவோர சுமை மற்றும் சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்க மாநில தலைவர் ராசா முருகேசன் தலைமை வகித்தார். இது குறித்து அவர் கூறுகையில், வாரச்சந்தைகளை மட்டுமே நம்பி ஏராளமான குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சந்தைகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம் என்றார்.

தலைமை அலுவலக செய லாளர் காந்திராஜன், தேனி மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் தமிழரசு ஆகியோர் உடனிருந் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in