திருப்பத்தூர் மாவட்டத்தில் : ஒரே நாளில் 174 பேருக்கு : கரோனா தொற்று :

திருப்பத்தூர் மாவட்டத்தில் : ஒரே நாளில் 174 பேருக்கு : கரோனா தொற்று :
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,572-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 328 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 974 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 110 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in