Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

மண்ணெண்ணெய் குடித்த குழந்தை உயிரிழப்பு :

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள சாட்டுப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகள் மது (2). வீட்டின் அருகே விளையாடி விட்டு வீட்டுக்கு வந்த மது, தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை குடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது வழியிலேயே மது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x