சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு :

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு  :
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி காளிகாபுரம் பகுதியில் வசித் தவர் சின்னகுழந்தை மனைவி ஆதியம்மாள்(55). இவர், தனது கிராமத்தில் உள்ள சாலையில் நேற்று முன் தினம் நடந்து சென்றார். அப்போது, ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த கார், ஆதியம்மாள் மீது மோதியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in