திருப்பத்தூர் மாவட்டத்தில் - டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு :

திருப்பத்தூர் மாவட்டத்தில்  -  டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு :
Updated on
1 min read

கரோனா பரவலை தடுக்க இன்று முதல் டாஸ்மாக் பார்களுக்கு தடை விதித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்கள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி யாராவது பார்களை திறந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in