மருத்துவ அதிகாரிகள் 2 பேர் உட்பட - விருதுநகரில் 156 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று :

மருத்துவ அதிகாரிகள் 2 பேர் உட்பட -  விருதுநகரில் 156 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 மருத்துவ அதிகாரிகள் உட்பட 156 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் இதுவரை 950 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 அரசு மருத்துவர்களும், 4 செவிலியர்களும் அடங்குவர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 156 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் களில் திருத்தங்கல், சிவகாசியைச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் இருவரும், கோட்டூரில் மின்வாரிய ஊழியர் ஒருவரும் அடங்குவர். மேலும் அருப்புக்கோட்டை, மறவர்பெருங்குடி, காரியாபட்டி, பந்தல்குடி, சிறுகுளம் பகுதிகளில் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்த 5 பேருக்கு மீண் டும் கரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in