கூலித்தொழிலாளி கொலையில் தம்பதி கைது :

கூலித்தொழிலாளி கொலையில்  தம்பதி கைது :
Updated on
1 min read

திருநெல்வேலி வண்ணார் பேட்டையைச் சேர்ந்தவர் பேராச்சி (55). இவர் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் உள்ள டீக்கடைகளில் கூலித் தொழில் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நாழிக்கிணறு பேருந்து நிறுத்தம் ஆவின் பாலகம் பின்புறம் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து, தகவலறிந்ததும் திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், கோயில் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருச்செந்தூர் வீரராகவபுரம் பகுதியைச்சேர்ந்த நீலேஷ் (52) என்பவருக்கும், பேராச்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த நீலேஷ், தனது மனைவி லதாராணியுடன்(40) இணைந்து, பேராச்சியை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார், நீலேஷ், அவரது மனைவி லதாராணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in